இங்கிலாந்தில் குளோசெஸ்டர்சயர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி கே ரசல். இவர் `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், இவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. வலி தாள முடியாமல், படுக்கையில் விழுந்தார். சில மணி நேரம் கழித்து எழுந்தபோது, தனது குரல் தெளிவின்றி இருப்பதை உணர்ந்தார்.
மெல்ல மெல்ல குரல் தெளிவடைந்தபோது, அவரது உச்சரிப்பே மாறி இருந்தது. அவர் பிரெஞ்சு மொழியில் பேசுவது தெரிய வந்தது. ஆனால், அதற்கு முன்புவரை, அவருக்கு தாய்மொழியான ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




