இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

செக்ஸ் ஊக்க மாத்திரை 'வயகரா' பாதி பேருக்கு பயனளிப்பதில்லை

E-mail அச்செடுக்க
உடலுறுவுக்கு ஊக்கம் அளிக்கும் மிக பிரபலமான மாத்திரையான 'வயகரா' அதை உட்கொள்ளும் பாதி பேருக்கு பயனளிப்பதில்லை என்று லண்டனில் பிரிட்டிஷ் சொஸைட்டி ஆப் செக்ஸ்வுல் மெடிசைனின் முன்னாள் தலைவரும், பிரிமின்கம் உள்ள குட் ஹோப் என்ற மருத்துவமனையின் யுரோலோஜிஸ்ட் நிபுணருமான டாக்டர் ஜியோப்ஃபிரே தெரிவித்துள்ளார்.

உடலுறவில் நாட்டம் இருந்தும் ஆண்குறியில் விறைப்பு தன்மை குறைந்தவர்கள் உட்கொள்ளும் மாத்திரை வயகரா. இந்த மாத்திரை பல பெயர்களில் வந்தாலும் 'வயகரா' என்ற மூல வேதியியல் கொள்கை பெயரில் அறியப்படுகிறது. இது ஆணுறுப்பில் உள்ள  நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளில் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டி ஆண் உறுப்பை விரைக்க செய்வதால் உலகம் முழுவதிலும் விரைப்பு தன்மை குறைந்த ஆண்களால் பயன்படுத்தப்படுகிறது. வருடத்திற்கு பல மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகும் இந்த மாத்திரை பாதி பேருக்கு வேலை செய்வதில்லை. வெறும் 'வயாகரா'வினால் மட்டும் அவர்களுது விரைப்பு தன்மை யை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

ஒரளவுக்கு ஏற்கனவே உடலுறவுக்கு தேவையான ஹார்மோன்கள் இருப்பவர்களுக்கு தான் இது வேலை செய்வதாக கூரியுள்ள அவர் இதை பயன்படுத்துவதற்கு பதிலாக இரத்த பரிசோதனை செய்து 'டெஸ்டோஸ்டிரோன்' (testosterone) என்னும் ஹார்மோன் எண்ணிக்கை பொருத்து தகுந்த மாத்திரை மற்றும் அரைத்திண்மக் கரைசல் போன்ற விலை குறைந்த வழிமுறைகளையே பின்பற்றலாம் என்று கூறியுள்ளார்.

ஆகவே செக்ஸ் குறைபாடு உள்ள அனைவரும் 'வயகரா' மாத்திரை உட்கொண்டால் பூரன உடலுறவு கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொள்வது தவறு என்று அவர் டெய்லி மெயில் என்ற ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: மரு. லெ. பூபதி , November 20, 2010
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் - என்ற வள்ளுவன் குரல் இதற்கும் பொருந்தும்.
இந்த மாத்திரை சாப்பிட, இதைய துடிப்பை அதிகரித்து இரத்த ஓட்டம் கூடுதல் ஆகி அதன் பின் எழுச்சி ஏற்ப்படுகிறது. இது மட்டுமே அல்லாது பல காரணங்கள் இருப்பது உண்மை. எந்த ஒரு செயலுக்கும் நமது மனம் ஒருநிலை படவேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் வைத்தியர்கள்தான் மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும். மனமது செம்மை ஆனால் மாத்திரை மருந்து வேண்டாம்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்