புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.
புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.
சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

எழுதியவர்: Alain, October 02, 2010
எழுதியவர்: ibrahim, October 02, 2010
nw not a matter can build temple in saudi or pakistan. it is real judgment , judges never say demolish of masjid , death of humen beings & loss of properties. its mean anybody want any land , just occupy long time then demolish building then can take over land ? then one more think should be u know indian muslim HISTORY, INDIAN MUSLIM not come from pakistan or saudia arabia . they born in india . u know muslims are starter of freedom fighter , more muslims (MORE THAN MUSLIM PERCENTAGE) fight for nation compare than HINDUS.they sacrifice soul , properties etc. THEY JUST THINK ONLY NATION FREEDOM.so dont hide them history. NEVER THINK THEM OWN LIFE. THEY SACRFICE EVERYTHING
before babri masjid verdict muslims believe indian democracy & law
BUT nw they cant belive indian democracy & law, this is one side judgem
ent ( SAFFRON JUDGEMENT) NW THEY FELL SECOND CLASS PERSON OF INDIAN
nw world see indian democracy (VALUABLE ONESIDE JUDGEMENT)
Also they see stupid indian poltics & indian politician
| < முந்தையது | அடுத்தது > |
|---|





இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:
GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
“The area covered under the central dome of the disputed structure is
the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by
Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.