ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தது குறித்து கேள்வி எழுப்பி சலசலப்பை உண்டாக்கிய சமூக ஆர்வலர் அருந்ததி ராய், அந்த மாநிலம் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.பொது சமூகத்திற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு ஏற்பாடு செய்து ஸ்ரீநகரில் நடைபெற்ற "காஷ்மீர் : சுதந்திராமா அல்லது அடிமையா?" என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அருந்ததி ராய் பேசினார்.
காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்திய அரசு கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது என்று ராய் கூறினார்.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற உடனே, இந்தியா காலனியாதிக்க சக்தியாக மாறியதாகவும் அருந்ததி ராய் குற்றம் சாட்டினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




