தமிழ சட்ட மன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் திங்கள் கிழமை முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்ட மன்றத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் சட்டமன்ற நடவடிக்கை குழு கூடி கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை இறுதி செய்யும்.
திங்கள் கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் குளிர் காலக் கூட்டத் தொடர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் டி. சுதர்ஸனம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஒத்தி வைக்கப்படும்.
இந்தக் கூட்டத் தொடரின் போது பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




