காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. தற்போது காவிரியில் 1 இலட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கையூட்டப்பட்டுள்ளன.சனிக்கிழமை நள்ளிரவில் காவிரியில் நீர் வரத்து 50 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்குப் பின் இது 1 இலட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.
ஒகனேக்கலில் பொதுமக்கள் குளிக்கவும் படகுகளில் பயணம் செய்யவும் தடைவிதித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருதால் கிருஷ்ணகிரி தடுப்பணையில் நீர் மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது. எனவே இந்தத் தடுப்பணையில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இரு மாவட்டத்திலும் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




