2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தான் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1.76 இலட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி தன்னுடைய அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தென்கொரியத் தலைநகர் சியோல் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் டில்லி திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தான் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தில் ஆதாரத்துன் நிரூபிக்கப்படும் என்று கூறிய ஆ.ராசா, 1999ஆம் ஆண்டின் தொலைத் தொடர்பு கொள்கைபடியே தன்னுடைய அமைச்சகம் செயல்பட்டதாகவும் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




