ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 50 போலீசாரை தலிபான்கள் கடத்தி சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மத்திய மாகாணமான கூனார் மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் பாதுகாப்புப்பணியின் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஏராளமான வாகனங்களுடன் வந்த தலிபான்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர்.
எனினும் தலிபான்கள் 50 போலீசாரை கடத்திச் சென்றதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு்ள்ளனர்.
கூனார் மாகாணத்தைச்சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து தலிபான்களை தேடி வருவதாக செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




