மேற்கு வங்க மாநில முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக 208 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க ஆளுநர் மாளிகை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள புல்வெளியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடந்தது.
மதியம் 1.01 மணிக்கு மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நாராயணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
மம்தாவைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 43 பேர் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 36 பேர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
புதிய மந்திரிகளில் அமித் மித்ரா, பார்தா சட்டர்ஜி, மனீஷ்குப்தா, சுப்ரதா முகர்ஜி, அப்துல் கரீம் சவுத்திரி, சதன் பாண்டே, ரத்யாபாசு, நூல் ஆலம் சவுத்திரி ஆகியோர் முக்கியமானவர்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பதவி ஏற்றனர். பிறகு அவர்கள் மம்தாவிடம் வாழ்த்து பெற்றனர். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு 3200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் மேற்கு வங்க மாநில ஆளுநர் மாளிகை விழா கோலாகலமாக காட்சி அளித்தது.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொண்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




