சென்னை : சென்னையிலிருந்து மலேசியா கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அதிகாலை 2.30 மணி வரை வேறு விமானிகள் யாரும் வரவில்லை. இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பயணிகள், ஏர் இந்தியா அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அதிகாரிகள் ‘காலை 10 மணிக்கு விமானம் புறப்பட்டுச் செல்லும், அதுவரை உங்களை ஒரு ஓட்டலில் தங்க வைக்கிறோம்.என்று சொகுசு பேருந்துகளில் அழைத்துச் சென்று சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைத்தனர்.
இதையடுத்து, காலை 10 மணிக்கு 146 பயணிகளும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 10 மணி நேரம் தாமதமாக கோலாலம்பூருக்கு விமானம் புறப்பட்டது. இச்சம்பவம், விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




